சீனாவின் இரு மலைப்பிரதேச மாகாணங்களை இணைக்கும் உலகின் மிக உயரமான பாலம் பெய்பஞ்சியாங் பாலம் (Beipanjiang Bridge) போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இதனால் 4 மணிநேரம் எடுக்கும் பயணம் 1 மணி நேரமாக குறையும். நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் 565 மீட்டர்கள், அதாவது 1,854 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
யுனான் (Yunnan) மாகாணத்தின் ஸுனாவேய் ( Xuanwei ) மற்றும் குயுஸூ (Guizhou) மாகாணத்தின் ஷுய்செங் (Shuicheng) மலைப்பகுதிகளை இந்தப் பாலம் இணைக்கிறது. இந்த அதிசய பாலம் ஒரு பில்லியன் யுவான் (144 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவில் கட்டப்பட்டுள்ளது. ஹுபேயில் (Hubei ) கட்டப்பட்ட ஸீ டு (Si Du ) நதியின் மீது கட்டப்பட்ட பாலத்தை விடவும் இது உயரமானது என்பதால் உலகின் மிக உயரமான பாலம் இதுவே.
Source The Hindu